1 November 2020
4 October 2020
கோம்மடீஸ்வரர், கோமட்டகிரி, கர்நாடகாவின் சமண தடயங்கள்..
கட்டுரை: ஜான்பீட்டர்முன்னால் தொல்லியல்
துறை.தாளவாடி
மௌரிய மன்னன்
சந்திரகுப்தன் (322B.C- 298B.C) அரசு முடியை துறந்து தனது குருவான பத்ரபாகுடன்
பாடலிபுத்ரத்திலிருந்து வந்து சரவணபெலகுலாவில் சில காலமிருந்து பின்னர் சல்லேகன
முறையில் உயிர்நீத்தார். அக்காலந் தொட்டு சமணம் தென்கர்நாடகத்தில் வேரூன்றியது
எனலாம். பின்னர் கங்கர்கள் காலத்தில் பெரும் செல்வாக்கு பெற்றது அவருக்கு பின்னர்
ஹொய்சாளர் காலத்தில் அரசர்கள், அரசியர் அமைச்சர்கள், தண்டநாயக்கரகள் என அனைவரும்
சமணத்தை போற்றி வளர்த்தனர்
நாடெங்கும் சமண
ஆலயங்கள் எழுப்பினர் பத்திற்க்கும் மேற்பட்ட பாகுபலியின் ஒற்றை கல்லிலான பிரமாண்ட
சிலைகளை(monolithic statue) தென் கர்நாடகத்தில் நிறுவினர் மைசூர் மற்றும்
அதனருகேயுள்ள பகுதிகளை கருத்திற் கொள்வோமானால், சரவணபெலகுலாவில் உள்ள உலகபிரசத்தி
பெற்ற பாகுபலியின் 57 அடி உயர சிலையை சொல்லலாம் இதனை கங்க தேசத்தின் அமைச்சர்
மற்றும் படைதலைவராக பணியாற்றிய சாமுண்டராயன் 981A.D. அமைத்தார் மற்றொரு பிரமாண்ட
சிலை மண்டியா மாவட்டத்தில் அரத்திபுராவில் இரு மலைகளின் மத்தியில் குன்றின் மேல்
அமைந்துள்ள பாகுபலி சிலை இது
முற்கால கங்கர்
பாணியில் 10 அடி உயரமும் மூன்றரை அடி அகலமுடையது இச்சிலை சரவணபெலகுலா பாகுபலி
சிலைக்கும் காலத்திற்கு முற்பட்டது எனவும் கி.பி.8ம் நூற்றாண்டு காலகட்டத்தில்
அமைக்கப்பட்ட தாயிருக்கலாம் என கர்நாடக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். மேலும்
மைசூரிலிருந்து 22கி.மீ தொலைவில் பெடத்தூர் என்ற பசுமை சூழ்ந்த கிராமத்தில்
பெலிகெரே என்ற ஏரியின் அருகே கோமட்டகிரி என்ற குன்றின் மேல் அமைந்துள்ள 17 அடி உயர
பாகுபலிசிலையை காணலாம். பக்தர்கள் இவரை
தரிசிக்க ஏதுவாக படிகட்டுகள் போடப்பட்டுள்ளன. எழிலார்ந்த சூழலில் ஏகாந்தமாய்
நின்றிருக்கும் இவர் எண்ணூறு ஆண்டுகள் பழமையானவர் என்கின்றனர். பாகுபலி:- இப்பெயருக்கு வலிமயான
கரங்களை உடையவர் எனப் பொருள். 24 சமணதீர்த்தங்கரரில் முதல் தீர்த்தங்கரர்
ரிஷபநாதரின் இளைய புதல்வர். பனிரெண்டு காலம் நின்றநிலையில் கடுந்தவம் புரிந்து
ஞானத்தையடைந்தார் ( கேவலக்யான ) இவர்
கோம்மடீஸ்வரர் என்ற நாமத்திலும் வணங்கப்படுகிறார்.
சிலையமைப்பு-: நீண்ட காலமாய்
அசைவற்று மோன நிலையில் நின்றிருக்கும் தவக்கோலம் கயோத்சர்க நிலை!, சுருள் சுருளான
தலை கேசம் காதணியில்லா வெறுமையான நீண்ட செவி கருணை பொங்க இவ்வையகத்தை காணும்
வகையில் திறந்த விழிகள் ஜீவகலை ததும்ப சாந்தமான முகவசீகரிப்பு அதில் மெல்லிய
புன்னகை இழையோட, அகன்ற தோள்கள் வழியாக நீண்டு முழங்கால்கள் வரை செல்லும் கரங்கள் தொடை பகுதியை
தொடாதவாறும் நெடுங்காலமாக புரிந்த கடுந்தவத்தினால் கொடிகள் காலிலிருந்து படர்ந்து
சென்று தோள் வரை சுற்றிக் கொண்டிருக்கும் வண்ணம் பாங்குற வடிக்கப்பட்டிருக்கும்
சிறப்பு என அத்தனையும் சரவணபெலகுலாவிலுள்ள பாகுபலியின் பிரமாண்ட சிலையை
பிரதிபலிப்பதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுங்கின்றனர்
ஆனால் சிலையின் பக்கவாட்டில் இருபுறமும் யக்ஷன் யக்ஷி காட்டப்படருக்கிறது மாறாக
இங்கு புற்றிலிருந்து நாகங்கள் படமெடுத்த நிலையில் காட்டப்பட்டிருப்பது மட்டும்
வித்தியாசம் அவ்வளவே!
மாஸ்தாபிஷேகம்-; சரவணபெலகுலாவில்
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்வு பக்தர்கள் பொது ஜனங்களை கவரும் வண்ணமாக இங்கு
ஆண்டு தோறும் கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது இதனை ஷிமோகா
மாவட்டம் ஸ்ரீஷேத்ர ஹம்புஜ ஜைன மடத்தை சேர்ந்தவர்கள் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
நண்பகல் 12 மணிக்கு துவங்கும் இந்த அபிஷேக ஆராதனை மதியம் 2 மணிவரை நடைபெறுகிறது.
குங்குமம், மஞ்சள், வாசனை திரவியங்கள் கலந்த வண்ணகலவை புனிதநீர் சந்தனம்
அஷ்டகாந்தம் பால் இளநீர் கரும்புசாறு என அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் "
பாகுபலி மஹாராஜரிகெ ஜெயவாகலி!" அஹிம்ச பரம தரமனிகே ஜெயவாகலி என உற்சாக
கோஷமிடுகின்றனர்... பின்னர் மங்களாராதனையுடன் மஸ்தாபிஷேக நிகழ்வு நிறைவுகிறது..
கோமட்டகிரியருகே ஒரு பாறையின் மேல் பாகுபலியின் பாதசுவடுகள் வடிக்கப்பட்டுள்ளது
பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக படிகட்டுகளுடன் தளம் போன்று அமைத்துள்ளனர் மேலும் அருகே 24 தீர்த்தங்கரர்களின் பாத
சுவடுகளுக்கும் சிறு மாடங்கள் கட்டி அதனையும் வழிபடுகின்றனர்..
18 August 2020
லஷ்மிநாராயணர் திருக்கோயில், ஹொசஹாலலு, மண்டியா மாவட்டம், கர்நாடகா.
இடைக்கால கர்நாடகத்தில் விஷ்ணுவர்த்தனன் தலமையின் கீழ் வலு பெற்ற ஹொய்சாள வம்சம் சேவுனர்களிடமிருந்து வட கர்நாடகத்தையும் சோழர்களிடமிருந்து தென் கர்நாடகப்பகுதிகளையும் மீட்டெடுத்து கர்நாடகம் முழுமையும் கைக்கொண்டு பேரரசாக உருவெடுத்தது.. கலை, இலக்கியம் சமுதாய வாழ்வியல் முறைகளில் மேம்பாட்டு நிலையைடைந்து ஹொய்சாளர் காலம் கர்நாடக வரலாற்றில் பொற்காலமாக விளங்கியது. அதுகாறும் சமண மதத்தை அரச மதமாக பின்பற்றிய ஹொய்சாள குலம் இராமானுஜர் தத்துவார்த்த கோட்பாட்டின்பால் கவரப்பட்டு பிட்டிதேவன் என்ற விஷ்ணுவர்த்தன் வைணவ மதத்தை தழுவியப்பின்னர் நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான சைவ,வைணவ, சமணக்கோயில்கள் எழுப்பப்பட்டன..
தென் கர்நாடகப்பகுதிகளில் பெருமளவு
கிடைக்கும் மாக்கல்லினை (chlorit
schist soap stone ) கொண்டு கோயில்களை அமைத்தனர் இக்கல்லின் சிறப்பம்சம் யாதெனில்
பாறையினின்று வெட்டியெடுத்து சிற்பங்களாக செதுக்கும் வரை இலகும்
தன்மையுடையனவாகவும் (malleable and ductile) சூரிய ஒளி
பட்டவுடன் இறுகி கடினமாகிவிடும் இந்த
கருமை மற்றும் இளம்பச்சை நிறம் கொண்ட மாக்கல்லினால் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களையும் கடைந்தெடுத்த வழுவழுப்பான தூண்களையும் அமைத்து
கண்கவர் கோயில்களை கட்டினர்
சிற்பிகள் தத்தம் பெயர்களை
தங்களது படைப்புகளில் பொறித்து
வைத்தனர் இதன் மூலமாகவும் கல்வெட்டுகளினின்றும்
அக்காலத்திய புகழ் பெற்ற
சிற்பிகளையும் அவர்தம் பங்களிப்பினையும் அறிகிறோம் மல்லேஜா, மானியோஜா, மல்லிதம்மா, விபனா, மதுவண்ணா, கும்மபைரணா, தொண்டசாரி போன்றோர் பிரசித்தமானஹொய்சாள சிற்பிகள் என்பதையறிகிறோம் இத்தகு ஹொய்சாள
கோயிலைப் பற்றி இங்கு
காண்போம்
லஷ்மி நாராயணர் திருக்கோயில்
இக்கோயிலானது ஹொய்சாள கோயில்
கட்டிட மரபின்படி திரிகூடசால அமைப்பில் கட்டப்பட்டது ஜகதியானது ஒரு மீட்டர் உயரத்துடன் மேடை போன்று எழுப்பப்பட்டு அர்த மண்டபத்தை மையப்படுத்தி மூன்று கருவறைகள் கொண்ட
கோயிலாகும் ஒன்றில்மட்டுமே கருவறையின் மீது சுகநாசியுடன்கூடிய விமானம்
கட்டப்பட்டுள்ளதுமற்றவை
வெறும் தளங்களாக விடப்பட்டுள்ளன கருவறைகள் மூன்றும் இடைநாழியுடன் நவரங்கம்
எனப்படும் அர்தமண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
முதன்மை கருவறையில் நாராயணர்
லலாதாம்பிகா கோலத்தில் சம்பங்கமாக நின்ற கோலத்தில் நான்கு
திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். மேலிரு கரங்களில் சங்கு.
சக்கரத்துடனும் கீழிரு கரங்கள்
முறையே கதை மற்றும்
பத்மத்தை பற்றியிருக்க நுண்ணிய
வேலைப்பாடுகளமைந்த
அணிகலன் மற்றும் நேரத்தியான ஆடையணிந்த நிலையில் நாகவடிவ
தோரணத்தின் மேற்புறம் கீர்த்திமுகம் காட்டப்பட்டிருக்கிறது.
தெற்கு’ கருவறையிலுள்ள வேணுகோபாலசாமி சிலை தற்காலத்தில் அமைக்கப்பட்டதெனவும் பழைய
சிற்பம் மைசூருக்கருகேயுள்ள கண்ணம்பாடி கிருஷ்ணர் கோயிலுக்கு எடுத்து
சென்று அங்கு வழிபடுகின்றனர் என்பது
இங்கு நிலவும் செவிவழி
செய்தியாகும். தென்புறத்திலுள்ள கருவறையின் வாயிற்புற காவலர்கள் இரு
புறமும் நின்றிருக்க மத்தியில் லஷமிநரசிம்மர் தமது மடியில்
பூதேவி சகிதமாக அமர்ந்த
நிலையில் அருள் பாலிக்கிறார். கீழ்புறம் பிரகலாதன் பெருமாளை
சேவிக்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. அர்த
மண்டபத்தை நான்கு தூண்கள்
தாங்கி நிற்கின்றன அவை
நன்கு கடையப்பட்டு வழுவழுப்பான நிலையில் நுண்ணிய வேலைப்பாடுகளை கொண்டு வடிக்கப்பட்டுள்ளன. மேலும்
இத்தூண்கள் ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் வெவ்வேறு கோணங்களில் நடன
மாந்தர்கள் பாங்குற காட்டப்பட்டுள்ளனர். அர்த்த மண்டபத்தின் விதானத்தில் வித விதமான
அழகு புடைப்புச் சிற்பங்கள் சிற்பியின் கற்பனைக்கும் கலைத்திறனையும் நமக்கு
சான்றாய் உணர்த்துகிறது. இம்மண்டபத்தில் மஹிஷாசுர
மர்த்தினி மஹிஷனை வதம்
செய்யும் கோலத்துடன் காட்சி தருகிறார்
இக்கோயிலில் கல்வெட்டுகள் காணப்படாமையால் இவற்றின்
காலம் குறித்து அறுதியிட்டு கூறுதல் கடினம் ஆயினும் கோயில் கட்டுமானம், சிற்பங்களின் வடிவமைப்பைக் கண்ணுறுங்கால் நக்கேஹள்ளியிலுள்ள
லஷ்மி நரசிம்மர் கோயில்
சோமநாதபுரத்திலுள்ள
கேசவர் கோயிலினையும் ஒத்துவருவதால் இக்கோயில் மல்லிதம்மா என்ற
சிற்பியால் 1240 A.D ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என
கன்னட வரலாற்றாய்வாளர்கள் ஒருவாறு
கணிக்கின்றனர்..
வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்